தமிழக செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர்கள் படுகாயம்

தினத்தந்தி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எலந்தகொட்டப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் ராஜேஷ் (வயது 19). இவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது மோட்டார் சைக்கிளில் அதே ஊரை சேர்ந்த நண்பர் சந்தோஷ் (20) என்பவரை உட்கார வைத்து கொண்டு பாப்பிரெட்டிப்பட்டிக்கு வந்தனர். அங்கு மாத்திரை, மருந்துகள் வாங்கி கொண்டு சாமியாபுரம் கூட்ரோடு நோக்கி வந்தனர்.

அப்போது அங்குள்ள தனியார் கிரானைட் அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராஜேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜேஷ், சந்தோஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?