தமிழக செய்திகள்

ஆதிகேசவ பெருமாள் திருவீதி உலா

தேசூரில் ஆதிகேசவ பெருமாள் திருவீதி உலா நடந்தது.

தினத்தந்தி

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் நகரின் பஜார் வீதியில் உள்ள எத்திராஜ் வள்ளி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆவணி மாத பிறப்பு முன்னிட்டு திருவிழா நடந்தது.

காலையில் எத்திராஜ் வள்ளி தாயார், ஆதிகேசவ பெருமாள், பூதேவி தாயார் ஆகிய சாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவை மூலம் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

பின்னர் உற்சவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

இதையடுத்து உற்சவமூர்த்தியான ஸ்ரீதேவி, பூதேவி, ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து டிராக்டரில் வைத்து நகரில் முக்கிய வீதியின் வழியாக திருவீதி உலா நடந்தது.

அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி ஆதிகேசவ பெருமாளை வரவேற்றனர். பின்னர் சாமி கோவிலை வந்து அடைந்த பின்னர் மகாதீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை தென்தின்னலூர் ஆசிரியர் வரதன், பால்காரர் வெங்கடேசன் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு