தமிழக செய்திகள்

நிலத்தகராறில் விவசாயியை தாக்கியவர் கைது

தினத்தந்தி

மத்தூர்:

போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டி அருகே உள்ள மலையாண்டஅள்ளியை சேர்ந்தவர் தீர்த்தகிரி (வயது 47). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (50). உறவினர்கள். இவர்களுக்குள் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி தீர்த்தகிரி வளர்த்து வந்த மாடு, மனோஜ் நில பகுதிக்கு சென்று பயிர்களை தின்றதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதில் தீர்த்தகிரியை மனோஜ் தரப்பினர் தாக்கினர். இதுகுறித்து தீர்த்தகிரி மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மனோஜ் மகன் அரவிந்த் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மலும் மனோஜ் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

======

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்