தமிழக செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டியில்கட்டிட மேஸ்திரியை தாக்கியவர் கைது

தினத்தந்தி

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் ஜீவா (வயது 35). கட்டிட மேஸ்திரி. இவருக்கு ராணி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜீவா குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது பக்கத்து வீட்டுக்காரரான முருகன் மகன் வினோத் குமார் (31) என்பவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் தகாத வார்த்தையால் திட்டி வீட்டின் கதவை உடைத்தும் ஜீவாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து குடும்பத்தினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஜீவா கொடுத்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்