தமிழக செய்திகள்

கைதான இலங்கை மீனவர்கள் 5 பேர், ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 5 பேரும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தினத்தந்தி

தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 14-ந்தேதி அன்று ரோந்து சென்ற போது இந்திய கடல் எல்லையான மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் படகில் இருந்த இலங்கை நிகாம்பு பகுதியை சேர்ந்த மார்க்ஸ் ஜூட் (வயது 62), இமானுவேல் நிக்சன் (51), சுதீஷ்சியான் (21), ஆன்டனி ஹேமாநிசந்தன் (48), துருவந்தா ஸ்ரீலால் (28) ஆகிய 5 பேரை மீட்டு தருவைக்குளம் கடலோர போலீசில் ஒப்படைத்தனர்.

அதை தொடர்ந்து போலீசார் இந்த 5 மீனவர்களை நேற்று ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கவிதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி 5 மீனவர்களையும் வருகிற 31-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் சென்னை புழல்சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு