தமிழக செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடகடலோர மாவட்டங்களில் லேசான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்புரம், நாகை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, வேலூர், ராணிபேட்டை, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைபெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை மழை பெய்தது. கிண்டி ,வடபழனி, விமானநிலையம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்தது. இதேபோல் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் ,மாம்பலம் , கோயம்பேடு ,ஆவடி ,பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை