தமிழக செய்திகள்

சென்னை வந்த பேருந்துகள் அடுத்தடுத்து மோதல்: 15 பேர் காயம்

விபத்தில் 2 பேருந்துகளின் ஓட்டுநர், லாரி ஓட்டுநர், பயணிகள் என 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அப்போது மதுரையில் இருந்து சென்னை சென்ற மற்றொரு பேருந்தும் இதில் சிக்கி விபத்துக்குள்ளானது.

அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதிக்கொண்ட நிலையில், மினி லாரி ஒன்று அரசு பேருந்து மீது மோதி சாலையோரம் கவிழ்ந்தது. அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேருந்துகளின் ஓட்டுநர், லாரி ஓட்டுநர், பயணிகள் என 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்