கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கோழி இறைச்சியின் விலை அதிரடி உயர்வு..!

கிறிஸ்தவர்களின் தவக்காலம் முடிந்ததால் நெல்லையில் கோழி இறைச்சியின் விலை 280 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

நெல்லை,

கிறிஸ்தவர்களின் தவக்காலம் முடிந்ததால் நெல்லையில் கோழி இறைச்சியின் விலை 280 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த 40 நாட்களாக கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் இருந்ததால் அசைவ உணவை தவிர்த்து வந்தனர். இதனால் அண்மை காலமாக கறிக்கோழியின் விலை 200 ரூபாய்க்கு கீழே இருந்தது.

இந்த நிலையில் நேற்றுடன் தவக்காலம் முடிந்து இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுவதாலும், ஞாயிறு என்பதாலும் நெல்லையில் கறிக்கோழியின் விலை உயர்ந்துள்ளாது. நேற்றுவரை 180 ரூபாய்க்கு விற்பனையாக ஒருகிலோ கோழி இறைச்சி இன்று 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. புறநகர் பகுதிகளில் போக்குவரத்து செலவுகளை கணக்கிட்டு ஒருகிலோ இறைச்சி 280 ரூபாய்க்கு வரை விற்பனையாகிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்