தமிழக செய்திகள்

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் , அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில், குடும்பத்தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சிக்கு முன்னர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சீபுரம் அன்னை இந்திராகாந்தி சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்