தமிழக செய்திகள்

வரி செலுத்தாத 130 கடைகளுக்கு 'சீல்' மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

வரி செலுத்தாத 130 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

தினத்தந்தி

சென்னை பிராட்வே ரத்தன் பஜாரில் இருந்து பேசின் பிரிட்ஜ் சாலை வரை மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான சாலையோர கடைகள் உள்ளன. இதில் 160 கடைகள் வாடகை மற்றும் நிலுவை வரி தொகை செலுத்தாமல் இருப்பது தெரியவந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் சுமார் 30 கடைகளின் உரிமையாளர்கள், வரியை உடனடியாக செலுத்தி விட்டனர். வரி செலுத்தாத மீதமுள்ள 130 கடைகளுக்கு நேற்று காலை வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனாலும் அந்த கடைக்காரர்கள் வரி செலுத்தாமலேயே இருந்தனர்.

இதையடுத்து மாநகராட்சி சார்பில், துணை வருவாய் துறை அதிகாரிகள் நீதிபதி, ரங்கநாதன், முருகேசன், உரிமம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், வரி மதிப்பீட்டாளர் ரகமதுல்லா ஆகியோர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வரி செலுத்தாத 130 கடைகளையும் பூட்டி 'சீல்' வைத்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு