தமிழக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவு - திருச்சி விமான நிலையத்தில் அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி...!

திருச்சி விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவையொட்டி தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

திருச்சி,

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா பின் சையத் அலி நஹியான் மறைவைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்கும் படி இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நேற்று அனுப்பிய தகவல்களின்படி, மறைந்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் சயத் அல் நகியானுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்தது.

அதன்படி திருச்சி விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவையொட்டி தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை