தமிழக செய்திகள்

குரோம்பேட்டையில் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் பட்டதாரி பலி

குரோம்பேட்டையில் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் பட்டதாரி பலியானார்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் மேலமையூர் எம்.ஜி.ஆர்.நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பிரெடரிக் ஸ்டீபன்(வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், சென்னை ராமாபுரத்தில் உள்ள மருந்து நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். தன்னுடைய மனைவி உமா மற்றும் 6 மாத குழந்தையுடன் குரோம்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை மனைவியிடம் நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்ற பிரெடரிக் ஸ்டீபன், குரோம்பேட்டை ராதா நகர் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது ரெயிலில் அடிபட்டு பலியானார். இதுபற்றி தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்