தமிழக செய்திகள்

டிரைவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி டிரைவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.

தினத்தந்தி

திண்டுக்கல் நகர போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு வாரவிழா மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இதற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரலாதன் தலைமை தாங்கினார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் திலிப் குமார், போலீசார் மற்றும் ஆட்டோ, வேன், லாரி டிரைவர்கள் 110 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது விபத்துகள் நடைபெறாமல் தடுக்க டிரைவர்கள் அனைவரும் சாலை விதிகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும். செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் டிரைவர்கள் அனைவருக்கும் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்