தமிழக செய்திகள்

சேலத்தில் தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

தினத்தந்தி

சேலம் 

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது. கிளை தலைவர்கள் சாமிநாதன், தனபால் ஆகியோர் தலைமை தாங்கினர். கிளை செயலாளர்கள் செந்தில்குமார், பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ஞானத்தம்பி, தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாநில பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

உண்ணாவிரத போராட்டத்தில், தமிழகத்தில் அனைத்து நிலை தொழில்நுட்ப காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இத்துறையில் 12 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பயிற்றுனர்கள் மற்றும் உதவியாளர்களை முதல்-அமைச்சரின் தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பயிற்சியாளர்களுக்கு பயிற்சி கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே சீருடை, பாடப்புத்தகங்கள், காலணிகள் உள்ளிட்ட அரசு நல உதவிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு