தமிழக செய்திகள்

சேலத்தில் உள்ள உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை - தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்

சேலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி, சப்பாத்தி மாவு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினத்தந்தி

சேலம்,

சேலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி, சப்பாத்தி மாவு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

சீலநாயக்கன்பட்டியில் இயங்கிவரும் உணவகம் ஒன்றில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, தரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி, சப்பாத்தி மாவு, பிரியாணி, மசாலா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

இதனிடையே, மசாலாக்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன? ஏன் மாமிசங்கள் முறையாக பதப்படுத்தப்படுவதில்லை என்பது குறித்து விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்