தமிழக செய்திகள்

நெமிலி அருகே பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா

நெமிலி அருகே பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

தினத்தந்தி

நெமிலி

நெமிலி அருகே பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கணபதிபுரம் கிராமத்தில் ஓடை நீர்நிலை புறம்போக்கு பகுதியில் 14 குடும்பத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் வசித்து வந்தனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வருவாய்த் துறையினர் முடிவு செய்து சித்தூர் கிராமத்தில் இடத்தை தேர்வு செய்தனர்.

தொடர்ந்து நேற்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இருளர் மக்கள் 14 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, துணை தாசில்தார் முத்துகுமரன், வருவாய் ஆய்வாளர் பிள்ளையார், கிராம நிர்வாக அலுவலர் உமா, ஒன்றியக் குழு உறுப்பினர் சரஸ்வதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு