தமிழக செய்திகள்

ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட வாலிபர் கைது

தேவதானப்பட்டியில் ஆட்டா டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்

தினத்தந்தி

தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 26). ஆட்டோ டிரைவர். இன்று இவர், தேவதானப்பட்டிஅரிசி கடை ஆட்டோ நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (29) என்பவர், முரளியிடம் பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் தர மறுத்ததால் மாரிமுத்து கத்தியை காட்டி மிரட்டினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பிடிக்க ஓடி வருவதை கண்ட அவர் தப்பி ஓடினார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை தேடி வந்தனர். இதற்கிடையே அந்த பகுதியில் சுற்றித்திரிந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்