தமிழக செய்திகள்

காற்றுடன் பலத்த மழை; வாழைகள் சாய்ந்தன

காற்றுடன் பலத்த மழை பெய்ததால் வாழைகள் சாய்ந்தன.

தினத்தந்தி

தொட்டியம்:

தொட்டியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏரிகுளம், சித்தூர், சீனிவாசநல்லூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை, கொடிக்கால் பயிர்களை பயிரிட்டு இருந்தனர். இதில் ரஸ்தாலி, பூவன், கற்பூரவள்ளி, ஏலரசி போன்ற வகைகளில் வாழைகளை பயிரிட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 10 மணி வரை தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் காற்றில் சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன. இதனால் இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு