தமிழக செய்திகள்

ரப்பர் மரம் விழுந்து வீடு சேதம்

அருமனை அருகே காற்றுடன் கனமழை, ரப்பர் மரம் விழுந்து வீடு சேதம்

அருமனை, 

அருமனை அருகே உள்ள முக்கூட்டுகல் பகுதியில் நேற்று மாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் மற்றும் வாழைகள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. இந்த நிலையில் விஜயகுமார் என்பவரின் வீட்டின் அருகில் நின்ற ரப்பர் மரம் காற்றில் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் கூரை கடுமையாக சேதம் அடைந்தது. மரம் விழுந்த போது வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். 

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை