கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

"இனி டாஸ்மாக்கில் மது வாங்கினால் பில்" - வெளியானது புது அறிவிப்பு..!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் விரைவில் கணினிமயமாக்கப்பட உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் விரைவில் கணினிமயமாக்கப்பட உள்ளது. இதற்காக பொதுத்துறை நிறுவனமான ரெயில்டெல்லுக்கு டாஸ்மாக் நிறுவனம், கணினிமயமாக்கம் தொடர்பான ரூ.294 கோடி மதிப்பிலான ஆர்டரை வழங்கியுள்ளது.

இதன் காரணமாக மதுபானம் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதன் மூலமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை என்பது தடுக்கப்படும்.

விரைவில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட உள்ளதால், இனி மது வாங்கினால், பில் கிடைக்கும் என்ற நடவடிக்கையும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.  

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?