தூத்துக்குடி,
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் விஜய் வசந்த் தந்தி டிவிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அப்பாவின் மீது வைத்திருக்கும் மரியாதை காரணமாகவும் தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டும் எனக்கு வாய்ப்பளித்த காங்கிரஸ் தலைமைக்கு நன்றி.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸின் கோட்டை. சமீபகாலமாக பாஜக மீது மக்களுக்கு அதிருப்தியும் எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ராகுல் காந்தி வந்துசென்ற பிறகு கன்னியாகுமரியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலே சவாலானதுதான். பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டு முறை அப்பாவை எதிர்த்துப் போட்டியிட்டு, ஒருமுறை வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் தேர்தல் களம் பரபரப்பாகவே இருக்கும். என்றாலும் நான் வெற்றி பெறுவேன் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன். 18-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.