தமிழக செய்திகள்

கரூர்: வேன் கவிழ்ந்ததில் அய்யப்ப பக்தர்கள் 10 பேர் காயம்

கரூரில் வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய அய்யப்ப பக்தர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தினத்தந்தி

கரூர்,

கரூர் அருகே வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து சென்ற கர்நாடகாவை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சிலர் பயணம் செய்து கொண்டு இருந்தனர்.

அந்த வேன் தவிட்டுபாளையத்தில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த அய்யப்ப பக்தர்களில் 10 பேர் காயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பக்தர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்