தமிழக செய்திகள்

மது விற்றவர் கைது

போடியில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்

போடி நகர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது போடி சாலை காளியம்மன் கோவில் அருகே மது விற்ற மீனாட்சிபுரத்தை சேர்ந்த கண்ணன் (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.