தமிழக செய்திகள்

ராதாபுரத்தில் எம்.சாண்ட் மணல் திருடியவர் கைது: லாரி பறிமுதல்

ராதாபுரத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஓட்டி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், மருதப்பபுரம் ஜங்ஷன் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சகாயராபின் ஷாலு தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, பலுகல்லை சேர்ந்த ராஜேஷ் (வயது 45) ஓட்டி வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக எம்.சாண்ட் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த ராஜேஷை நேற்று முன்தினம் கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து சுமார் 30 டன் எடையுள்ள எம்.சாண்ட் மணல் மற்றும் ஒரு லாரியை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்