தமிழக செய்திகள்

சிவகாசியில் பத்திரிக்கையாளர் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்

சிவகாசியில் பத்திரிக்கையாளர் மீது மர்ம நபர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி,

இன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் அமைச்சர் ஒருவருக்கும், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாக செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அந்த இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு சிவகாசியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இந்த கொடூர தாக்குதலுக்குள்ளான செய்தியாளர், தற்போது சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் செயல்கள் அதிகரித்து வரும் அவல நிலையை கவனத்தில் கொண்டு, தமிழக முதலமைச்சர் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு பத்திரிகையாளர் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தி உள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்