தமிழக செய்திகள்

சாத்தான்குளம் அருகேகோவில் கொடைவிழாவில் கோஷ்டி மோதல்

சாத்தான்குளம் அருகே கோவில் கொடைவிழாவில் கோஷ்டி மோதல் தொடர்பாக ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.

தினத்தந்தி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி மகன் சுந்தர் (40). இவர், அதே ஊரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் சக்திவேல் (45) என்பவரை போதையில் அவதூறாக பேசியதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுககு முன்பு அதே ஊரில் நடந்த கோவில் கொடைவிழாவில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது சக்திவேல், அவரது சகோதரர்கள் லிங்கராஜ், பாஸ்கர், பிரேம் ஆனந்த், பிரபாகர் ஆகியோர் சுந்தரை தாக்கினர். சக்திவேலை, சுந்தர், அவரது மகன் ரஞ்சித் ஆகியோர் தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், இருத்தரப்பைச் சேர்ந்த சுந்தர், சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தார். இதில் சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு