கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

நெல்லை: திருக்குறுங்குடி அருகே யானை நடமாட்டத்தால் நம்பி கோவிலுக்கு செல்ல தடை

திருக்குறுங்குடி அருகே யானை நடமாட்டத்தால் நம்பி கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியில் திருமலை நம்பி கோவில் உள்ளது. இக்கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இக்கோவிலில் தமிழ் மாத முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், திருக்குறுங்குடி அருகே யானை நடமாட்டம் உள்ளதன் காரணமாக, நம்பி கோவிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இன்று ஒருநாள் மட்டும் நம்பி கோவிலுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிப்பதாக முண்டந்துறை புலிகள் காப்பகம் தெரிவித்து உள்ளது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி