தமிழக செய்திகள்

மொபட் திருடிய முதியவர் கைது

பாளையங்கோட்டையில் மொபட் திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பாளையங்கோட்டை தியாகராஜநகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 63). இவர் தனது மொபட்டை தியாகராஜநகரில் உள்ள பள்ளிவாசல் அருகே நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது மர்மநபர் மொபட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மேலப்பாளையம் கொடிக்குளத்தை சேர்ந்த அப்துல்காதர் (62) என்பவர் மொபட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, மொபட்டை பறிமுதல் செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்