தமிழக செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகள்

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். சிலையின் கீழ் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தினத்தந்தி

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, குஜிலியம்பாறை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த சுவரொட்டிகளில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த சுவரொட்டிகள் அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திண்டுக்கல் பஸ்நிலையம் முன்பு அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலை கீழ் பகுதியில் நேற்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் சுவரொட்டியில், இவண் திண்டுக்கல் மாநகர், ஒன்றிய கழக தொண்டர்கள் என்று அச்சிடப்பட்டு இருந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில், திண்டுக்கல் நகரில் எம்.ஜி.ஆர். சிலை பகுதியிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்