தமிழக செய்திகள்

சோழபுரம் பகுதியில் நாளை மின்தடை

சோழபுரம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள நல்லமநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. ஆதலால் சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி, கிழவி குளம், சங்கரலிங்காபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள் புரம், அண்ணா நகர், முதுகுடி, ஜமீன் கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் கூறினார். 

SCROLL FOR NEXT