தமிழக செய்திகள்

பரந்தூரில் விமானநிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் - மக்கள் நீதி மய்யம் பாராட்டு

பரந்தூரில் விமானநிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்றுள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"காஞ்சிபுரம் பரந்தூரில் விமானநிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.

ஏற்கெனவே மக்களுக்கு விரோதமான பல திட்டங்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய கிராம மக்களைப் பாராட்டுவதுடன், அத்தீர்மானம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

கிராமசபையின் வலிமையை மக்கள் புரிந்துகொண்டதுபோல, மத்திய, மாநில அரசுகளும் உணர்ந்து, அவர்களது கோரிக்கையை ஏற்க வேண்டும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை