கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

மதுரையில் இன்று முதல் சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு

9-ந்தேதி நான்கு மாசி வீதிகள் உள்ளிட்டவற்றில் எந்த சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என காவல் துறை தெரிவித்துள்ளது.

மதுரை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாநகரில் இன்று முதல் சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மதுரையில் கீழமாரட் வீதி, நான்கு மாசி வீதிகள், நான்கு ஆவணி மூல வீதிகளில் இலகு ரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இலகுரக சரக்கு வாகனங்கள் மதியம் 12.30 மணி முதல் 3.30 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், 9-ந்தேதி நான்கு மாசி வீதிகள் உள்ளிட்டவற்றில் எந்த சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என காவல் துறை தெரிவித்துள்ளது.

வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மதுரை மாநகரில் வாகனங்களுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்