தமிழக செய்திகள்

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

விபத்து உள்பட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்த பாலாஜி கடலில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியும், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன்வாயல் கிராமத்தைச் சேர்ந்த நாகூர் மீரான் உசைன் ஆகியோர் சாலை விபத்திலும் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன்.

பூந்தமல்லி சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த சிவா என்பவர் மின்கம்பத்தில் பணியில் இருந்த போது மின்கம்பம் உடைந்து கீழே விழுந்ததிலும், மரக்காணம் தாலுகா கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்த பிரபு கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டும் வேதனை அடைந்தேன்.

இதுபோல பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு