தமிழக செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்பனை: பெட்டிக்கடைக்கு சீல்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

தினத்தந்தி

விக்கிரவாண்டி,

விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர வடிவேல், ஏட்டுகள் செல்வகுமார், ரகுபாஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் பனையபுரம் கடைவீதியில் அமுதா (வயது 46 ) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அமுதாவை போலீசார் கைது செய்தனர்.

தகவல் அறிந்த தாசில்தார் இளவரசன் உத்தரவின் பேரில் பனையபுரம் கிராம நிர்வாக அலுவலர் கவுசல்யா போலீசார் பாதுகாப்புடன் பெட்டிக்கடையை பூட்டி சீல் வைத்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு