தமிழக செய்திகள்

ஆலய சப்பர பவனி

ஆலய சப்பர பவனி நடந்தது

சிவகிரி:

சிவகிரி அருகே தேவிபட்டணம் குழந்தை தெரசாள் ஆலய திருவிழா நடந்தது. இதில் சப்பர பவனி நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 22-ந் தேதி பங்குதந்தை அருள்அலெக்சாண்டர் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதியில் இருந்து பங்கு தந்தைகளால் பல்வேறு தலைப்புகளில் திருப்பலி நடந்தது. 9-வது நாள் அன்று சிவகிரி பங்குதந்தை அலெக்சாண்டர் தேவதானம், பங்கு தந்தை ஜோசப், துரைச்சாமிபுரம் துணை பங்குத்தந்தை விமல் ஆகியோர் சப்பர பவனியை தாடங்கி வைத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் மீண்டும் கோவிலை அடைந்தது.

SCROLL FOR NEXT