தமிழக செய்திகள்

குடியாத்தம் அருகே சென்னை-பெங்களூரு டபுள் டெக்கர் ரெயிலில் புகை - பயணிகள் அதிர்ச்சி

குடியாத்தம் அருகே சென்னை-பெங்களூரு டபுள் டெக்கர் ரெயிலில் புகை வெளியேறியது.

தினத்தந்தி

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சென்னை-பெங்களூரு டபுள் டெக்கர் ரெயிலில் திடீரென புகை வெளியேறியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். டபுள் டெக்கர் ரெயிலின் சி-6 பெட்டியின் சக்கரத்தில் இருந்து புகை வெளியேறியுள்ளது.

புகை வெளியேறுவதை அறிந்த ரெயில் ஓட்டுநர் உடனே ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகை வெளியேறியதாக கூறப்படுகிறது. உடனடியாக ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள் பாதிப்பை சரிசெய்தனர். அதன் பின்னர் மீண்டும் ரெயில் பெங்களூருக்கு சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

சென்னை-பெங்களூரு டபுள் டெக்கர் ரெயிலில் புகை வெளியேறிய சம்பவம் பயணிகளிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு