தமிழக செய்திகள்

வழி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வழி கேட்பது போல் நடித்து 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

தினத்தந்தி

திருவாலங்காடு ஒன்றியம் தோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (வயது 34). சென்னையில் அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா (30). இவர் நேற்று மாலை வீட்டில் வளர்க்கும் மாடுகளைப் பிடித்துக் கொண்டு சாலையோரம் வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் லாவண்யாவிடம் வழி கேட்பது போல் நடித்து அவரது கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து லாவண்யா கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப் பகலில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்