தமிழக செய்திகள்

விமான நிலையத்தில் கண்கவர் புகைப்பட கண்காட்சி - அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்..!

கோவை விமான நிலையத்தில் சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

தினத்தந்தி

கோவை,

கோவை விமான நிலையத்தில் சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

தமிழர்களின் பாரம்பரியம், கலை மற்றும் வாழ்வியலை பறைசாற்றும் விதமாக கோவை விமானநிலையத்தில் கண்கவரும் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று காலை திறந்து வைத்தார்.

இந்த கண்காட்சியில் தமிழர்களின் நாட்டுப்புறக் கலைகளை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாதுறை முதன்மைச் செயலாளர் சந்திரன், சுற்றுலா துறை இயக்குனர் சந்திப் நந்தூரி, விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால், மேயர் கல்பனா, துணைமேயர் வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்