உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
2-வது தவணை தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து விட்டது. இதேபோல் தமிழ்நாட்டிலும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழுமையாக நடைபெற்று உள்ளது. 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள வேண்டும்.கேரளா மாநிலத்தில் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. 3-வது அலை வராமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
நேரடி வகுப்பு
இன்றைய காலக்கட்டத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று நேரடி வகுப்பில் கலந்து கொள்வது அவசியம். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு வராது.
இவ்வாறு அவர் கூறினார்.