தமிழக செய்திகள்

'வேளாண்மைத்துறையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது' - தமிழக அரசு

வேளாண்மைத்துறையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்துறையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கரும்பு விலை டன் ரூ.2,750 என்பது ரூ.3,134.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ரூ.611 கோடியில் கலைஞர் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் ரூ.335 கோடி மானியத்தில் விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும், ரூ.56 கோடியில் முதல் முறையாக ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100% மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்