தமிழக செய்திகள்

கார் மோதி பெண் சாவு

திருச்செங்கோடு அருகே கார் மோதி பெண் பலியானார்.

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 27). இவர் மண்டகாபாளையத்தில் உள்ள ஆயத்தஆடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலை ஸ்கூட்டரில் குமரமங்கலம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார், எதிர்பாராத விதமாக இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது கணவர் ராமு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்