தமிழக செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி பலி

எருமப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி இறந்தார்.

தினத்தந்தி

எருமப்பட்டி அருகே உள்ள அலங்காரம் ஊராட்சியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). விவசாய கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியில் இயற்கை உபாதைக்காக சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் நாமக்கல் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்து ராஜாவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு