விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக விக்கிரமசிங்கபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கல்லிடைக்குறிச்சி பொன்மாநகரைச் சேர்ந்த அழகேசன் (வயது 55) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.