தமிழக செய்திகள்

தூக்கத்தில் நடந்து போது மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு

தூக்கத்தில் நடந்த போது மொட்டை மாடியில் இருந்த கீழே விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 32). இவர் தனியார் பஸ்சின் டிரைவராக பணியாற்றி வருகின்றார்.

தாய் தந்தை இறந்துவிட்டதால் சசிகுமார் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். இவர் கடந்த 12-ம் தேதி அதிகாலை வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி உள்ளார். அப்போது திடீர் என்று எழுந்த சசிகுமார் தூக்கத்தில் நடக்க ஆரம்பித்து உள்ளார்.

இதில் மொட்டை மாடியின் விழுப்புக்கு சென்ற அவர் கால் தவறி கீழே விழுந்துள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர் சசிகுமாரை மீட்டு ஆரணி அரசு மருத்துவனையில் அனுமதித்தனர்.

தற்போது வேலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்றவந்த சசிகுமார் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சசிகுமாரின் அண்ணன் தமிழரசன் அளித்த புகாரின் பேரில் களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்