தமிழக செய்திகள்

முதியவர் மயங்கி விழுந்து சாவு

பாளையங்கோட்டையில் முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகே உள்ள பஸ்நிறுத்தத்தில் முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து பாளையங்கோட்டை போலீசார் முதியவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிர் இழந்தார். போலீசார் விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சோந்த ராமையா (வயது 68) என்பது தெரியவந்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT