தமிழக செய்திகள்

காந்தி படம் கால்வாயில் கிடந்ததால் பரபரப்பு

பந்தலூர் அருகே காந்தி படம் கால்வாயில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

பந்தலூர்

பந்தலூர் தாலுகா சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட எருமாடு அருகே இன்கோ நகரில் கால்நடை ஆஸ்பத்திரி முன்பு சாலை பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இன்டர்லாக் சாலை அமைக்கப்பட்டது. இந்த பணி முடிந்த பின்னர் அந்த பகுதியில் காந்தி படத்துடன் கூடிய பெயர் பலகை வைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது பெயர் பலகையில் இருந்த காந்தி படம் அருகில் உள்ள கால்வாயில் விழுந்து கிடக்கிறது. அரசு திட்ட பணி முடிவுற்ற பின்னர் வைக்கப்பட்ட பெயர் பலகையில் இருந்து காந்தி படம் விழுந்து கிடக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மகாத்மா காந்தி மீண்டும் பெயர் பலகையில் ஒட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு