தமிழக செய்திகள்

வென்னிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம்

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

தினத்தந்தி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு காலை 8 மணிக்கு அம்பாள் தபசு மண்டபம் செல்லுதல், மாலை 6 மணிக்கு சுவாமி காட்சி அருளுதல், 8 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?