தமிழக செய்திகள்

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை 37-வது மெகா கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மணவாளநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால், வட்டார மருத்துவ அலுவலர் காந்திமதி, கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், சந்திரசேகர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு