தமிழக செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தொடங்கியது - 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பதவியில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கான தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். 

காலை 9.30 மணி முதல் தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறுகிறது. சென்னையில் 432 இடங்களில் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 17 ஆயிரத்து 702 ஆண்கள், 12 லட்சத்து 18 ஆயிரத்து 922 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 150 பேர் எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்