சென்னை,
தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தங்களுடைய 5-8-2020 தேதியிட்ட நோட்டீஸ் கிடைக்கப்பெற்றது. கிடைத்த 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், பதில் அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், நடவடிக்கை எடுத்து என்னை தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளீர்கள். ஆகவே, என் பதில் கிடைக்கும் முன்னரே நான் குற்றவாளி என்று ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே தங்களின் தற்காலிக நீக்கத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். சட்டப்படி விசாரணை வைத்தால், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.